புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல் படுத்தி வருவது ‘திராவிட மாடல் அரசு’ என்பதை நீங்கள் அறிவீர்கள். மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளன. இந்த வரிசையில் மற்றுமொரு மாபெரும் திட்டம் தான் தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான ‘மகளிர் உரிமைத் திட்டம்’. இந்தத் திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை. உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். என்றும் அன்புடன் மு.க. ஸ்டாலின்’’ என வாழ்த்து கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை: குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் வாழ்த்து கடிதம் appeared first on Dinakaran.