சென்னை: செப்.28,29 மற்றும் அக். 1, 2-ம் தேதிகளில் 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்கள், மிலாது நபி, காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு 27ம் தேதி கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப்போக்குவரது கழகம் அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்புப்-பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
The post செப்.28,29 மற்றும் அக். 1, 2-ம் தேதிகளில் 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.