ஒரு கிலோ மல்லி, கனகாம்பரம் ரூ.400, ஐஸ் மல்லி ரூ.300, ஜாதிமல்லி, முல்லை ரூ.200, சாமந்தி, பன்னீர் ரோஸ் ரூ.20, சம்பங்கி ரூ.40, சாக்லேட் ரோஸ் ரூ.30, அரளி பூ ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூ விற்பனை சரிவு காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த பூவுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், அவற்றை குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறியதாவது: சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை, புரட்டாசி மற்றும் விசேஷ நாட்கள் இல்லாத காரணங்களால் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. இதனால் இல்லதரசிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். அனைத்து பூக்களையும் குறைந்த விலையில் வியாபாரிகள் விற்பனை செய்து வந்தாலும், சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்க வரவில்லை. இதனால், அனைத்து பூக்களையும் குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது.’’ இவ்வாறு அவர் கூறினார்.
The post விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு: விற்பனையாகாமல் குப்பைக்கு செல்லும் பூக்கள்,விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.
