இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் 9 போலீசாரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெண் போலீஸ் ரேவதி, பியூலா உள்பட பல்வேறு முக்கிய சாட்சிகள் ஆஜராகி, தங்களது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கை நீதித்துறை சார்பில் விசாரித்த அப்போதைய கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், நேற்று மதுரை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி தமிழரசி முன்பு ஆஜரானார். அவர் இந்த இரட்டை கொலை வழக்கில் தனது விசாரணை குறித்து சாட்சியம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு (செப். 26) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு மாஜிஸ்திரேட் சாட்சியம் appeared first on Dinakaran.