இதனால் அப்பேருந்து நிழற்குடையில் மழை மற்றும் வெயில் காலங்களின்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இப்பேருந்து நிழற்குடையை சீரமைக்கவும், அங்கு பேருந்து நின்று செல்லவும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, இப்பேருந்து நிழற்குடையை மீண்டும் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர சீரமைத்து, அங்கு பேருந்து நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post பாண்டரவேடு கிராமத்தில் ஆடுகளின் ஓய்விடமான பயணிகள் நிழற்குடை: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.