மீலாடி நபியை முன்னிட்டு வரும் 27ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு

புதுச்சேரி: மீலாடி நபியை முன்னிட்டு வரும் 27ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி; “மிலாடி நபியை (முனுஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு 27.09.2023 (புதன்) பதிலாக 28.09.2023 (வியாழன்) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 28.09.2023 அன்று ஜிப்மரில் வெளிபுற நோயாளிகள் பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வெளிபுற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். 27.09.2023 அன்று ஜிப்மர் மருத்துவமனை வழக்கம் போல் இயங்கும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மீலாடி நபியை முன்னிட்டு வரும் 27ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: