நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக சத்தியவாணி வீட்டின் அருகே உள்ள ஒருவரது வீட்டின் சுவர்இடிந்து விழுந்தது. இதில் சத்தியவாணியின் வீடு உடைந்ததில் சத்தியவாணி உயிரிழந்தார். இதில் கணவர் தப்பினார். சத்தம் கேட்டு பிள்ளைகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றினர். சத்தியவாணியின் உடலை பார்த்ததும் கதறினர். உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சத்தியவாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை பல்லாவரம் அருகே கனமழையால் சோகம்… பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.