இதன் பின்னர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டியளிக்கையில், ‘‘விஷுவல் எபெக்ட்ஸ் கேமிங் அனிமேஷன் துறையை தற்போது கையில் எடுத்துள்ளோம். உலகளாவிய சந்தையில் இத்துறையின் தேவை தீவிரமாக இருப்பதால், அதனை பூர்த்தி செய்யும் வகையில் எவ்வாறு இதனை வளர்ப்பது என்பது குறித்த கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் ஐடி துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள நகரங்களில் ஐடி பார்க் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் ஐ.டி.துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.