இந்த நிலையில் இன்று உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! என கூறினார். இதன் பின் பேசிய அமைச்சர் அரசு சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடல் உறுப்பு தானம் செய்தோருக்கு மரியாதை செலுத்துவர். மற்ற மாநில அரசுகளும் இதனை பின்பற்றி மனிதாபிமானம் காக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
The post உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும்: மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.