நாளை நெல்லை – எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் காணொலியில் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: நாளை நெல்லை – எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் காணொலியில் தொடங்கி வைக்கிறார். செப்.25-ம் தேதி முதல் எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குகிறது. செவ்வாய்கிழமை நீங்கலாக மற்ற நாட்களில் எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கும். காலை 6 மணிக்கு நெல்லையில் புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நாளை நெல்லை – எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் காணொலியில் தொடங்கி வைக்கிறார்! appeared first on Dinakaran.

Related Stories: