விஎச்பி முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை ஜாமினில் விடக் கூடாது; போலீஸ் கடும் எதிர்ப்பு

சென்னை: விஎச்பி முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை ஜாமினில் விடக் கூடாது என போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாலும் அவரை ஜாமினில் விடக் கூடாது என போலீஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது. செப்.11-ல் தியாகராயர் நகரில் நடந்த கூட்டத்தில் அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

The post விஎச்பி முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை ஜாமினில் விடக் கூடாது; போலீஸ் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: