மனைவி, மகள் மாயம்: கணவன் போலீசில் புகார்

பொன்னேரி: பொன்னேரி அருகே காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசல் புகார் கொடுத்துள்ளார். பொன்னேரி அடுத்த கம்மவார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் 39. விவசாயி. இவருக்கு இந்துமதி(34) என்ற மனைவியும் நிரஞ்சன்(15) என்ற மகனும் நிவேதினி(14) மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு, வீட்டில் தூங்கி இருந்த மனைவி மற்றும் மகள் இருவரும் காணவில்லை. மேலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்துமே இரவோடு இரவாக எடுத்துச் சென்று விட்டதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று பல இடங்கள் சென்று தேடியும் கிடைக்காததால் தசரதன் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். பொன்னேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கலை தோழன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனைவி மற்றும் மகளையும் தேடி வருகின்றனர். விசாரணையில் அதே பகுதி சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற வாலிபருக்கும் இந்துமதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகுமாருடன் இந்துமதி மற்றும் நிவேதினி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி, மகள் மாயம்: கணவன் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: