சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே விற்பனையானது. 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ஒரு சவரன் ₹44,320க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ₹80 உயர்ந்து ஒரு பவுன் ₹44,400க்கும் விற்கப்பட்டது.தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ₹560 உயர்ந்தது.
இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ₹5,550க்கும், பவுன் ₹44,400க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. அதாவது, கிராமுக்கு ₹20 குறைந்து ஒரு கிராம் ₹5,530க்கும், பவுனுக்கு ₹160 குறைந்து ஒரு பவுன் ₹44,240க்கும் விற்கப்பட்டது.
The post தங்கம் விலை சவரனுக்கு ₹160 குறைந்தது appeared first on Dinakaran.