பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 53,000 ஆசிரியர்கள் 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலத்துடன் சேர்க்கப்படவில்லை. சேர்க்காமல் விடுபட்ட காலத்தையும் பணிக்காலத்துடன் இணைத்து உரிய பணி பலன் வழங்கவேண்டும். மருத்துவர்களுக்கு இருப்பதுபோல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை விரைவாக நிறைவேற்றித்தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அனைத்து கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். சந்திப்பின்போது, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் தி.அருள்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்: அமைச்சர்களிடம் சங்க தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.
