இந்த வழக்கில் ஜாமின் பெற்ற பத்ரி சேஷாத்ரி தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சிக்கும் வகையில் தாம் பேசவில்லை என்றும் நீதித்துறை மீது தாம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பத்ரி சேஷாத்ரி தரப்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றி கூறிய அவதூறு கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்த பத்ரி சேஷாத்ரி: வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.