அந்த மனுவில், பிரஜ்வல் ரேவண்ணா தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையத்திடம் தனது முழு சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணாவை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பிரஜ்வல் ரேவண்ணாவின் மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் மனோஜ் மிஷ்ரா மற்றும் ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வு, பிரஜ்வல் ரேவண்ணாவை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து, அவர் தொடர்ந்து எம்.பி-யாக பணியாற்ற அனுமதியளித்தது.
The post சொத்து விவரங்களை மறைத்த விவகாரம் தேவகவுடா பேரன் தகுதிநீக்க உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.