இந்த பாக்டீரியாவால், லாராவின் கை விரல்கள், உதடு, பாதங்கள் அழுகி கருத்துபோனது. உடல் முழுவதும் பாக்டீரியா தொற்று பரவியதால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை, லாராவின் இரு கைகள், கால் பாதங்கள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. அவரது உயிரை காக்க வேறு வழியில்லாததால் கை, கால்கள் துண்டிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
The post சரியாக வேக வைக்காத ஜிலேபி மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்த பெண் appeared first on Dinakaran.