தஞ்சாவூருக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இங்கு அமைந்துள்ள பீரங்கி மேடு இன்றளவும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் மிகை இல்லை. தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு சோழமண்டலத்தை கி.பி. 1532ல் நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். ரகுநாத நாயக்கர் கி.பி. 1600 முதல் 1645 வரை தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தார். இவர் நாயக்க வம்சத்தின் 3 வது மன்னர். தந்தையின் மறைவிற்குப் பின் கி.பி. 1617ல் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப்பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார். இன்றைய தஞ்சாவூரில் உள்ள மானோஜிப்பட்டி பகுதி அன்றைய கொல்லர்களின் இருப்பிடம் மற்றும் பணியிடம் ஆகும். எவ்வித வசதிகளும் இல்லாத காலத்தில் தஞ்சை கொல்லர்களின் தொழில் திறமையால் ரகுநாத நாயக்கரின் ஆணைக்கிணங்க உருவானது தான் இந்த ராஜகோபால பீரங்கி என்று அழைக்கப்படும் பழமையான பீரங்கி. இன்று உலகில் உள்ள பழைய பீரங்கிகளில் 5ம் இடம் பிடித்துள்ள பீரங்கிதான் தஞ்சாவூர் பீரங்கி.
இதற்கு ஏன் இந்த பெயர்?
தான் வணங்கும் தெய்வமான, மன்னார்குடி ராஜகோபால சுவாமியின் பெயரையே இந்த பெரும் பீரங்கிக்கு பெயராக வைத்தார் ரகுநாத நாயக்கர். தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில் ஒரு பெரிய மேடை (சுமார் 60 அடி உயர குன்று) போல் அமைக்கப்பட்டு அதன்மேல் இந்த பெரிய பீரங்கி வைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை கம்பீரமாக இந்த பீரங்கி மேடை உள்ளது. காலப்போக்கில் இது பீரங்கி மேடு என்றே அழைக்கலாயிற்று. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் தஞ்சை பீரங்கியோ தேனிரும்பு பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 26 அடி நீளம் 300 எம்எம் உருட்டுருளையும் 150 எம்எம் உட்சுவர் கனமும் கொண்டது. எடை 27 டன். இந்தியாவிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும். தஞ்சாவூர் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருக்கும் பீரங்கிகள் வண்ணம் பூசப்பட்டு பாதுகாப்பான முறையில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் தஞ்சாவூரில் உள்ள இந்த பீரங்கி 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கன கம்பீரமாக கட்டுக்குலையாமல் இருக்கிறது. இந்த பீரங்கியை உருவாக்க இரண்டு முக்கியமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் வரலாறு கொண்ட இந்த பீரங்கிமேடானது முழுக்க முழுக்க தமிழர்களின் தொழில்நுட்பங்களாலும், சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதை ஒருமுறை பார்த்து நம் முன்னோர்களின் தொழிற்திறமையை கண்டு மகிழ வேண்டும். கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை கம்பீரமாக இந்த பீரங்கி மேடை உள்ளது. காலப்போக்கில் இது பீரங்கி மேடு என்றே அழைக்கலாயிற்று. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் தஞ்சை பீரங்கியோ தேனிரும்பு பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
The post வெட்டவெளியில் வெயிலிலும் மழையிலும் கட்டுக்குலையாமல் 400 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சாவூர் பீரங்கி appeared first on Dinakaran.