தங்கம் விலை தொடர் ஏற்றம் 3 நாட்களில் சவரன் ரூ.480 உயர்ந்தது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர் ஏறுமுகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களில் சவரன் ரூ.480 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 12ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.44,160க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 13ம் தேதி தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. 14ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.43,840க்கு விற்பனையானது. 15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்துக்கு விற்பனையானது. தொடர்ந்து 16ம் தேதியும் தங்கம் விலை அதிகரித்தது.

அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,530க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,240க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.400 வரை அதிகரித்தது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,540க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,320க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

The post தங்கம் விலை தொடர் ஏற்றம் 3 நாட்களில் சவரன் ரூ.480 உயர்ந்தது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: