குறும்படம் எடுக்க சென்ற 2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

இடைப்பாடி: திருப்பூர் சத்யா நகரை சேர்ந்தவர் புவனேஷ்(18). ஈரோடு மாவட்டம், பெருந்துறை தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களான சங்ககிரி நாகிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ்(17), ஈரோடு கருங்கல்பாளையம்தீபக் (18), தேவூர் சஞ்சீவ்ராஜ் (18) ஆகியோர், இடைப்பாடி அருகே தேவூர் சீரங்ககவுண்டம்பாளையத்தை சேர்ந்த கிஷோர்(18) என்பவரின் விவசாய தோட்டத்தில் குறும்படம் எடுக்க சென்றுள்ளனர். அங்குள்ள விவசாய கிணற்றில் சஞ்சீவ்ராஜ் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற தீபக்கும் கிணற்றில் குதித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

The post குறும்படம் எடுக்க சென்ற 2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: