இந்த கூட்டத்திற்கு 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 84 பேர் கலந்து கொண்டனர். 4 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் நியமனம், மறுசீரமைப்புக்கு பிறகு முதல்முறையாக இந்த கூட்டம் நடைபெற்றது. தெலங்கானாவில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதால், அம்மாநில தேர்தல் அறிக்கை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநில தேர்தல்களும் தெலங்கானா தேர்தலுடன் சேர்ந்து நடைபெறவுள்ளதால், அந்த தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐதராபாத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: சோனியா, ராகுல் பங்கேற்பு appeared first on Dinakaran.
