கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் வேதனையில் உள்ள ராமேஸ்வர மீனவர்கள் 17 மீனவர்களையும், அவர்களது விசை படகுகளுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் இன்று ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர்.
The post தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம் appeared first on Dinakaran.