இவர்களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரள எல்லையையொட்டி உள்ள குமரி மாவட்ட களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த பெண் ஒருவருக்கு காய்ச்சல்பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அவரது வீடு களியக்காவிளையில் உள்ளது. அவர் கேரளாவில் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார். ஊருக்கு வரும் வழியில் அவரை சோதனை செய்தனர். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததும், பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.
எனவே இன்னும் காய்ச்சல் முழுமையாக குணம் அடையாததால், அவரை மீண்டும் திருப்பி அனுப்பினர். இதே போல் குமரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவன், காய்ச்சல் பாதித்த நிலையில் கேரளாவில் இருந்து கல்லூரிக்கு வந்தான். எல்லையில் நடந்த பரிசோதனையில் காய்ச்சல் இருந்தது உறுதியானதால் அவனையும் திருப்பி அனுப்பினர். இதே போல் மேலும் ஒரு பெண்ணும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
The post கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்தவர்கள் குமரிக்குள் நுழைய தடை: திருப்பி அனுப்பிய அதிகாரிகள் appeared first on Dinakaran.
