மற்றவர்களை பிடிக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து, சோதனைகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரவுடிகள் வேட்டை நடக்காத நிலையில், கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, ஆவடி மற்றும்
செங்குன்றம் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் ரவுடிகள் வேட்டையை துவங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கொலை வழக்கில் 7 பேர், கொலை முயற்சி வழக்கில் 5 பேர், போதைப்பொருள் வழக்கில் ஒருவர், வழிப்பறி வழக்கில் 4 பேர், பழைய குற்றவாளிகள் 7 பேர் மற்றும் பிடியாணை இருந்தும் போலீசாருக்கு தண்ணி கட்டிய திருவேற்காடு, சென்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நந்தகுமார் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், அம்பத்தூர் காவல் எல்லையில் கொலை வழக்கில் தொடர்புடைய நரேஷ் பாபு, செங்குன்றம் காவல் எல்லையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரிஷி, அன்வர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாகவே, பத்திரிகை போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களையும் அதிகாரிகள் அழைத்துக் கொண்டு ரவுடிகளை பிடிக்க சென்றனர். ஆனால் போட்டோவுக்கு போஸ்கொடுக்கும் அளவுக்கு ரவுடிகள் பிடிபடவில்லை. ஆனால், அதன்பின்னர் ரவுடிகள் 25 பேரை கைது செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபர்களுடன் சென்று ரவுடிகளை போலீசார் முதல் முறையாக பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post போட்டோ, வீடியோகிராபர்களுடன் சென்று வடிவேலு காமெடி பாணியில் ரவுடிகள் 25 பேர் கைது appeared first on Dinakaran.