இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோட்டமலை, பேய்மலை, மொட்டை பத்தாம் நம்பர் பீட், தொப்பி தூக்கும் பாறை, பெருமாள் மொட்டை, திருவிக்கல் மொட்டை, ராவுத்தர் கடைப்பகுதி, பூபூத்து உள்ளிட்ட இடங்களில் வரையாடுகள் வசித்து வருகின்றன. இந்த இடங்களில் மலை உச்சியில் தான் வரையாடுகள் காணப்படும். திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சுமார் 200 வரையாடுகள் வரை அதிகரித்துள்ளது’ என்றார்.
The post திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் வசீகரிக்கும் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.