கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதி அருகில் உள்ள பாறையில் சிக்கி தரை தட்டி நின்றது. இதை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த வல்லுனர் குழுவினர் மூன்று பரிந்துரைகளை செய்தனர். இதையடுத்து மும்பை தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மிதவை கப்பலில் ஏற்பட்ட 3 ஓட்டைகளை நீர்மூழ்கி வீரர்கள் மூலம் வெல்டிங் செய்து அடைத்து, அதில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, சாய்ந்த நிலையில் இருந்த மிதவை கப்பலை சமன் செய்தனர். ஆனாலும் இழுவை கப்பலை மீட்க முடியவில்லை. இன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அதிக விசை கொண்ட இழுவை கப்பல் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடரும் என கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கூடங்குளம் கடலில் கரை தட்டிய மிதவை கப்பல் மீட்பு பணி தீவிரம்: அதிக விசை இழுவை கப்பல் வரவழைப்பு appeared first on Dinakaran.