இதனை தொடர்ந்து, திமுக தலைமை பேச்சாளர்கள் சைதை சாதிக் மற்றும் தமிழ் சாதிக் ஆகியோர் திராவிட வரலாறு மற்றும் கலைஞருடைய சாதனைகள் பற்றி விளக்கி பேசினார். பின்னர், மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திமுக கொடி ஏற்றி வைத்து பேசியதாவது: கலைஞர் முதல்வரான பிறகு மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அப்போது அதிகளவில் இருந்தன. மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டது.
குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கலைஞர் உருவாக்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம் பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் வரவேற்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, அண்ணா நூலகம், ஆங்காங்கே மேம்பாலம், அடித்தட்டு மக்களுக்கு சம உரிமை வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சம உரிமை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைச் செய்தவர் கலைஞர் என பேசினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில், ஒன்றிய துணை செயலாளர் திருமலை நன்றியுரை கூறினார்.
The post கலைஞர் நூற்றாண்டு விழா திமுக தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.