மாட்டுக்கு புல் அறுக்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி சாவு

*பெரம்பலூர் அருகே பரிதாபம்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மாட்டுக்கு புல் அறுக்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.பெரம்பலூர் தாலுகா, செங்குணம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (61). இவர், தனது மாட்டுக்கு புல் அறுக்க நேற்று காலை ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றார். அப்போது, வரட்டுகேணி அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.

இதை தெரியாமல் கண்ணன் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாட்டுக்கு புல் அறுக்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி சாவு appeared first on Dinakaran.

Related Stories: