இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சென்று புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,“அவலாஞ்சி வனப்பகுதிக்குட்பட்ட எமரால்டு பகுதியில் இறந்துள்ள 2 புலிகளும் பெண் புலிகள். இவை இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். உடலில் சந்தேகப்படும்படி காயங்கள் எதுவும் இல்லை. நாளை, (இன்று) பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்புகள் கோவை மற்றும் ஐதராபாத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் புலிகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்’’ என்றனர். கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வன சரகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரமே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. மேலும், முதுமலை வனப்பகுதியில் மற்றொரு இடத்தில் ஒரு புலியும், நடுவட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலியும் இறந்துள்ளன. இப்படி ஒரே மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் 6 புலிகள் இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post ஊட்டி எமரால்டு பகுதியில் மர்மமான முறையில் 2 புலிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.