இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்; பிரதமர் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் (SPG) இயக்குநர் அருண் குமார் சின்ஹா அவர்கள் உடல்நிலைக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் இயக்குனர் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.