அதன்படி, துணை கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவில் 13 ஆயிரத்து 244 பேரும், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 4 ஆயிரத்து 466 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 710 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியலில், பொதுப்பிரிவில் 200க்கு 199.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்று மாணவி வேதலட்சுமி முதல் இடத்தையும், 199 மதிப்பெண்ணுடன் ராம் பிரசாத் 2ம் இடத்தையும், 198.5 மதிப்பெண்ணுடன் துருவன் 3ம் இடத்தையும் பிடித்தனர்.
7.5%உள் ஒதுக்கீட்டு பிரிவில் அரசு பள்ளி மாணவி 188.5 கட்-ஆப் மதிப்பெண்ணுடன் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவர்களுக்கான துணை கலந்தாய்வு 6ம் தேதி துவங்கி 9ம் தேதி முடிகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.சி.ஏ. பிரிவில் காலியாக உள்ள இடங்கள் எஸ்.சி. பிரிவுக்கு மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான இன்ஜினியரிங் கலந்தாய்வு வருகிற 11ம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது.
The post துணை கலந்தாய்வுக்கான இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு: 199.5 கட்ஆப் மதிப்பெண் பெற்று மாணவி முதலிடம் appeared first on Dinakaran.