கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலை பூஜை, கணபதி பூஜை, யாகங்கள் நடத்தப்பட்டு நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் காயத்ரி அன்புச்செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்குமார், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
The post மாம்பாக்கத்தில் முருக நாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.