நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் புல முதல்வர் முனைவர் சுப்பாராஜ், துறை தலைவர்கள் மற்றும் இணை புல முதல்வர்களை அறிமுகப்படுத்தி பேசினார். பேராசிரியர் சிவக்குமார் கல்லூரியில் நடைபெறும் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் பற்றி விளக்கி பேசினார். பேராசிரியர் தினேஷ்குமார் தொழில் தொடங்குதல், அதற்கான அங்கீகாரம் பெறுதல் ஆகியவை குறித்து விளக்கினார். இதில், பேராசிரியர் சரவணன், துறைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
The post கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா appeared first on Dinakaran.