அதே சமயம் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்களை மற்ற கட்சியினர் நிறுத்தி உள்ளனர்.மறைந்த முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி 50 ஆண்டுகளாக வென்று வந்த புதுப்பள்ளி தொகுதி இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மனை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் ஜேக் தாமஸ் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதிகளில் செப்டம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சோதனை அடிப்படையில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் பா.ஜவுக்கு எதிராக 5 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி உள்ளதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
The post 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 எம்எல்ஏ தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு: I.N.D.I.A கூட்டணிக்கு முதல் டெஸ்ட் appeared first on Dinakaran.