பின்னர், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர்.
The post வேளாண்மை துறை சார்பில் ரூ.3.32 கோடியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.