இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து புனித நீரை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி பொறியாளர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், நகராட்சி கவுன்சிலர்கள் கந்தசாமி, தாமஸ் என்கிற ராஜ்குமார், பத்மாவதி ஸ்ரீதர், அய்யூப் அலி, அருணா ஜெய்கிருஷ்ணா, ஹேமலதா நரேஷ், தனலட்சுமி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post திருவள்ளூர் ஜெயா நகரில் ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலய கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.
