பாஜவை சேர்ந்த ஜெய்வீர் ஷெர்கில் பேசுகையில்,‘‘ பிரதமர் மோடி எதிர்ப்பு என்ற கொள்கையினால் எதிர்கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன. பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ள எதிர்க்கட்சி கூட்டணி நிலைக்காது’’ என்றார். ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா கூறுகையில், ‘‘ பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அடிப்படை விஷயங்களில் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விதியின்படி தேர்தல் நடத்தப்பட்டால் நாளை சட்ட பேரவைகள் எதுவும் கலைக்கப்படாது என கூறமுடியுமா? ஒருவேளை தொங்கு பேரவைகள் அமைந்தால் கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படாது என்று உறுதியாக சொல்ல முடியுமா’’ என்றார்.
The post எதிர்க்கட்சிகள் கூட்டாக நின்றால் பாஜவை எளிதில் தோற்கடிக்கலாம்: ஆம் ஆத்மி உறுதி appeared first on Dinakaran.