இதில் பங்கேற்ற ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, ‘‘ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அரசு ரூ.38,500 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இலங்கையில் உள்ள படகுகளை விடுவிப்பது, மீனவர்கள் பிரச்னை குறித்து இருநாட்டு அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழுவின் மூலம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுக்கடலில் மீனவர்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) வசதி ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். பல்வேறு மாநில கடல் பகுதியில் மீன் பிடித்து கரைக்கு செல்லும் வகையில் தேசிய மீனவர் அடையாள அட்டை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’’ என்றார்.
The post தேசிய அடையாள அட்டை வழங்க பரிசீலனை நடுக்கடலில் மீனவர்களை பாதுகாக்க ஏர் ஆம்புலன்ஸ்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.