பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆவனி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, அம்மனை வழிபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று மாலை ஆவனி மாதம் பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் இன்றிவாழவும் , 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.

பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம்,மலர்களால்அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டினர். முன்னதாக மூலவருக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீ பவானி அம்மனுக்கு
மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் வெள்ளி அலங்காரத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி தேர்பவனியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

The post பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆவனி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: