குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை மைசூரு மகாராஜா மைதானத்தில் நேற்று நடந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி துவங்கி வைத்தார். விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் 1.1 கோடி மகளிர் பயன்பெறுகிறார்கள். இதையடுத்து ராகுல்காந்தி ேபசுகையில், ‘ காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது.
நாங்கள் ஒருபோதும் பொய்யான வாக்குறுதி அளிப்பதில்லை. இந்த 5 உத்தரவாதங்களும் வெறும் திட்டங்கள் கிடையாது. இது அரசின் நிர்வாக மாடல். ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி டெல்லியில் அமர்ந்து கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே ஆட்சி நடத்துகிறது. ஆனால் காங்கிரஸ் ஏழை மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறது. கிரகலட்சுமி திட்டத்துக்காக ரூ.17,500 கோடி நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார். முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘5வது இலவச திட்டமான வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 மற்றும் டிப்ளமா மாணவர்களுக்கு ரூ.1500 நிதியுதவி திட்டம் டிசம்பர் அல்லது ஜனவரியில் அமல்படுத்தப்படும் என்றார்.
The post கர்நாடகாவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் துவக்கம்: ராகுல்காந்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.