கொடியேற்றத்தை காண வெளிமாவட்ட, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். நாளை முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் பேராலயம் மேல்கோவில், மாதாகுளம், பேராலயம் கீழ்கோவில் ஆகிய இடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேர்பவனி செப்டம்பர் 7ம் தேதி (வியாழன்) இரவு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணி கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றம்: செப். 7ல் தேர் பவனி appeared first on Dinakaran.