கோவில்பாக்கம் பகுதியில் தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான இடத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு: கோவில்பாக்கம் பகுதியில் தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான இடத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கீழ்க்கட்டளை ஏரியையொட்டி நீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். தண்ணீர் மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைப்படுத்தப்படும் என்று ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு அளித்துள்ளார். நன்மங்கலம் ஏரி கிணறுகளில் முறைகேடாக நீர் எடுத்து லாரிகள் மூலம் விநியோகம் செய்வது தடுக்கப்படும் என்றும் மெட்ரோ பணி முடிந்த பகுதியில் சென்டர்மீடியன் அமைத்து பைக்குகள் செல்வதற்கு வழிவகை செய்ய அறிவுறுத்தியுள்ளார்

The post கோவில்பாக்கம் பகுதியில் தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான இடத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: