சென்னை: நீட் தடுப்புச் சுவர் உடையும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி எனவும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையானது அனைத்து மக்களின் கோரிக்கையாக மாறி உள்ளது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.