விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நர்ஸ் லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் உதவி உள்ளார். 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றதாகவும் மற்றும் 6 குழந்தைளை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் லூசி லெட்பி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அவரை குற்றவாளி என மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்ற நீதிபதி அறிவித்து அவருக்கான தண்டனை குறித்து நாளை அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
The post இங்கிலாந்தில் 7 பச்சிளங்குழந்தைகளை கொன்ற நர்ஸ் குற்றவாளி: இந்திய டாக்டர் உதவியால் சிக்கினார்; நாளை தண்டனை அறிவிப்பு appeared first on Dinakaran.