இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, அரசின் சட்டத் திருத்தத்தில் முன்தேதியிட்டு அமல்படுத்துவது தொடர்பாக தெளிவற்ற நிலை உள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட பத்திரப்பதிவுகள் குறித்து உரிமையியல் நீதிமன்றங்களில் மட்டுமே நிவாரணம் பெற முடியும். 2004ம் ஆண்டு மேற்கொண்ட பத்திரப் பதிவு குறித்து விசாரிக்க மாவட்ட பதிவாளர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
The post மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் தரும் சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.