விசாரணையில், கைதானவர்கள் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் சுப்பிரமணியன் என்பதும், பள்ளிக்கரணையை சேர்ந்த 64 வயது முதியவர் அண்ணாமலை என்பதும் தெரியவந்தது. இதில் சுப்பிரமணியன் வழக்கறிஞர் என்பதும், அண்ணாமலை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள், கட்டிங் மிஷின், ரூபாய் நோட்டுகளை எண்ணும் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்து புழக்கத்தில் விட வைத்தது குமார் என்பதும், அவரை நுங்கம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.
The post சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: வழக்கறிஞர், முன்னாள் ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.