இதுகுறித்த தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, தமிழ்வீரன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து, சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த காவிரியப்பன்(60) மற்றும் தமிழ்வீரனுடன் முயல் வேட்டைக்கு சென்ற சேட்டு ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் இருவரையும் அடைத்தனர்.
The post முயல் வேட்டைக்கு சென்ற விவசாயி மின்வேலியில் சிக்கி பலி appeared first on Dinakaran.