தற்போது ஸ்ரீநகரில் புதிய தளம் அமைத்து மிக்-21 ரக போர் விமானங்களுக்கு பதில் மிக்-29 ரக போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. ட்ரைடென்ட்ஸ் படை என்று அழைக்கப்படும் மிக்-29 ரக போர் விமானப்படை இப்போது ஸ்ரீநகரில் மேம்படுத்தப்பட்ட விமான படைத்தளத்தில் எதிரிகளை தாக்க தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஸ்ரீநகர் அமைந்துள்ளது. அதன் உயரம் சமவெளி பகுதிகளை விட உயரமாக உள்ளது.
எனவே நீண்ட தூரம் பறந்து செல்லும் மிக்-29 ரக போர் விமானங்கள் மூலம் எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியும். ஏற்கனவே 2019ல் பாலாகோட் வான்வழித்தாக்குதல் நடந்த போது பதிலடி கொடுத்ததில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதிலும் மிக்-29 ரக போர் விமானம் வெற்றிகரமாக செயல்பட்டது. மிக்-29 ரக போர் விமானத்தை இரவில் இயக்க முடியும். சீன படைகள் ஏதேனும் வான்வெளி அத்துமீறல் முயற்சிகள் நடந்தால் முதலில் பதிலடி கொடுக்க மிக்-29 ரக போர் விமானங்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
The post சீனா, பாகிஸ்தானை சமாளிக்க ஸ்ரீநகரில் மிக்-21க்கு பதில் மிக்-29 போர் விமானங்கள்: புதிய தளம் அமைத்து இந்தியா அசத்தல் appeared first on Dinakaran.