ஆனால் அந்த பெண்ணுக்கு தற்போது 17 வயதே ஆவதால் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தினேஷ் நாகமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே பயன்பாட்டில் இல்லாத தனியார் செல்போன் டவரில் ஏறி
தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த கன்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினர் வந்து தினேஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தினேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தால்தான் இறங்குவேன், இல்லாவிட்டால் குதித்து விடுவேன் என்று கூறி அடம் பிடித்தார். 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின் போலீசார் அந்த பெண்ணையே திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து தற்கொலை முயற்சி வழக்கு பதிந்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post எனக்கு அந்த பொண்ணுதான் வேணும்… டவரில் ஏறி ‘போக்சோ’ வாலிபர் அடம் appeared first on Dinakaran.