சென்னை: தமிழ்நாடு மாநில நீதித்துறையில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மாநில நீதித்துறையில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு வருகிற 19ம் தேதி முற்பகல் மட்டும் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The post சிவில் நீதிபதி எழுத்து தேர்வுக்கு ஹால்டிக்கெட் appeared first on Dinakaran.